id
int64
0
819k
text
stringlengths
101
362k
0
பொழிப்பு (மு வரதராசன்): சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று. மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது. பரிமேலழகர் உரை: சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.) குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவனுக்குச் சால்பென்னும் வலிமை உண்டாயின் அவருக்கு வறுமை இழிவன்று. சால்பின் வழி வாழ்வோருக்குச் செல்வத்தினால் யாதொன்றும் ஆகப் போவதில்லை. அதனால் 'இன்மை இளிவன்று' என்று கூறினார். சான்றாண்மையே நற்பண்புகளின் உறுதிப்பாடுதான். மேலும் சால்புக்குத் திண்மை என்று கூறிச் சால்பினை வலியுறுத்துகின்றார். பொருள்கோள் வரிஅமைப்பு: சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் ஒருவற்கு இன்மை இளிவன்று. பதவுரை: இன்மை-பொருளின்மை, வறுமை; ஒருவற்கு-ஒருவர்க்கு; இளிவன்று-இழிவு ஆகாது; சால்பு-நிறைகுணம்; என்னும்-என்கின்ற; திண்மை-வலிமை, உறுதி; உண்டு-உளது; ஆக-ஆகியிருக்க; பெறின்-அடைந்தால், நேர்ந்தால். இன்மை ஒருவற்கு இளிவன்று: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: ஒருவனுக்குப் பொருளின்மை இளிவாகாது. பரிப்பெருமாள்: ஒருவனுக்குப் பொருளின்மை இளிவாகாது. பரிதி: மிடி ஒருவர்க்குக் குற்றமன்று; அது முன்னை வினைப்பயன்; காலிங்கர் ('ஒருவர்க்' பாடம்): ஒருவரை எளிமைப் படுத்துமது வறுமை: ஆயினும் அவ்வறுமையும் ஒருவர்க்கு இளிவரவு அன்று; பரிமேலழகர்: ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. 'ஒருவனுக்குப் பொருளின்மை இளிவாகாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'வறுமை ஒருவர்க்கு இழிவாகாது', 'அவருக்கு உண்டாகும் வறுமை இழிவாகாது', 'ஒருவனுக்கு தரித்திரம் இகழ்ச்சி தரக்கூடியதல்ல', 'ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர். ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது என்பது இப்பகுதியின் பொருள். சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: சால்பாகிய நிலை உண்டாகப் பெறின். மணக்குடவர் குறிப்புரை: இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது. பரிப்பெருமாள்: சால்பாகிய நிலை உண்டாகப் பெறின். பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அமைவுயுடையர் ஆதல் பெறுதற்கரிதென்றது. பரிதி: செல்வமாவது யாவரையும் வணங்குதலால் இன்சொல்லினால் கூடி நடப்பதாவது என்றவாறு. காலிங்கர் ('ஒருவர்க்' பாடம்): தம்மாட்டுச் சால்பு என்று நூல்கள் எடுத்துரைக்கும் திட்பம் உளதாகப் பெறின் என்றவாறு. பரிமேலழகர்: சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின். பரிமேலழகர் குறிப்புரை: தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம். [தளராமை நாட்டுதலின் - மனம் தளராவாறு நிலைபெறச் செய்தலால்; தளராமை நாட்டுதலின் - சால்பு வறுமையால் மனம் தளராவாறு நிலைபெறச் செய்தலால்; நல்கூர்ந்த வழியும் -வறுமையுற்ற விடத்தும்] 'சால்பாகிய நிலை/திட்பம்/ வலி உண்டாகப் பெறின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'சால்பாகிய உறுதி மாத்திரம் இருக்குமானால்', 'சால்பு (நிறைகுணம்) என்னும் உறுதிப்பாடு ஒருவர்க்கு வாய்க்குமானால்', 'சான்றாண்மை என்னும் வலிமை உடையவனாகிய', 'சால்பு என்று சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெறின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். சான்றாண்மை என்னும் உறுதி இருக்குமானால் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: சான்றாண்மை என்னும் உறுதி இருக்குமானால் ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது என்பது பாடலின் பொருள். 'இன்மை ஒருவற்கு இளிவன்று' என்பதன் பொருள் என்ன? ஏழ்மையிலும் மேன்மை விடார் சான்றோர். சான்றாண்மை என்னும் சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவர்க்குப் பொருளின்மை இழிவான நிலைமையைத் தந்துவிடாது. நற்குணங்களால் நிறைந்தவர் சான்றோர் எனப்படுகிறார். இக்குணநலங்கள் உடைமை காரணமாகத்தான் அவற்றைப் பெற்றவர்க்கு வறுமை காரணமாக இழிவு என்பது ஏற்படாது என்கிறது பாடல். செல்வம் ஆற்றல் நிறைந்தது. எந்த இடர்ப்பாடு நேர்ந்தாலும் அதை வென்று விடும் வலிமை கொண்டது. பொதுவாக பொருளில்லா நிலைக்கு எல்லோருமே அஞ்சுவர். வறுமை வந்துற்றபோது ஒருவர்க்கு தாழ்வு வந்துவிடுகிறது; நல்குரவால் இன்பவாழ்வு கிடைப்பதில்லை; விரும்பியதைப் பெற முடிவதில்லை; செறுநர் செறுக்கை எதிர்கொள்ள இயலாது. சமுதாயத்தில் மதிப்பு நீங்கிவிடுகிறது. மற்றவர்கள் ஏளனம் செய்யும் இழிவு நிலை உண்டாகும். மதிப்பற்ற வாழும் வாழ்க்கையால் மனம் குன்றிப் போய்விடும். எவரும் நம்மைத் தாழ்வாக எண்ணவோ பேசவோ கூடாது என்பது பொருள்செய்வதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று. ஆனால் சால்புடையோர் வறுமையால் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்ட போதிலும் அக்குணங்களைத் திண்மையுடன் காத்துக்கொள்வாரானால் அவர் அடைந்த வறுமைநிலை அவர்க்கு இளிவு தராது என்கிறார் வள்ளுவர். இளிவு என்ற சொல் இழிவு என்ற பொருளில் தாழ்வு விளைவிப்பது என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஒருவர் சால்பில் உறுதியுடையவராக இருந்து விட்டாரேயானால் அவர் செல்வமில்லாநிலை எய்தினாலும் அவர் இகழ்ச்சிக்குரியவராக ஆக மாட்டார். சால்புடையோர் பொருளுக்காக ஏங்கி நிற்பவர்களல்லர். பொருளை ஒரு பொருட்டாகவும் மதிக்க மாட்டார்கள். தங்கள் சால்புகளால் அவர்கள் பெருமை பெற்றவர்களாதலால் வறுமை அவர்களை இகழ்வுக்குள்ளாக்க முடியாது. சான்றாண்மை அவர்க்கு வேண்டிய வலிமை தந்துவிடும். அவரது நற்குண நிறைவாலேயே உயர்வும் புகழும் குன்றாதிருப்பர். 'இன்மை ஒருவற்கு இளிவன்று' என்பதன் பொருள் என்ன? இன்மை என்ற சொல்லுக்கு பொருளின்மை, மிடி, வறுமை, தரித்திரம், நல்குரவு, பொருள் இல்லாத குறையாகிய வறுமை, இல்லாமை என்னும் வறுமை, பொருள் இல்லாத வறுமை நிலை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். 'கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்' என்று முன்பு குறள் 54-இல் மகளிர்க்கு கற்புத்திண்மையின் பெருமை சொல்லப்பட்டது. இங்கு சால்பென்னும் திண்மைஉண்டாகப் பெறின் என சான்றோருறும் வறுமை அவர்க்கு இழிவைத் தருவதன்று எனச் சால்புத்திண்மையின் சிறப்பு கூறப்படுகிறது. கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு (நடுவுநிலைமை 117 பொருள்: நடு நிலையாக அற வழியில் நின்றவனது தாழ்வை உலகம் கேடாகக் கருதாது) என்று நன்னெறியாளர் உற்ற கேட்டை உலகோர் தாழ்வாகக் கருதமாட்டார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளமையையும் இணைத்து எண்ணலாம். வறுமையுற்றபோது சான்றோர் வாடுவதில்லை. பொதுநலம் நாடித் தன்னலம் மறந்த சால்பே இவர்களுக்குத் திண்மை தருகின்றது. அதனால் வறுமை வந்தபோதும் அவர்கள் இழிவாக எதையும் எண்ணுவதில்லை. பண்பு நலங்களையே அவர்கள் செல்வமாகக் கருதுவர். வறுமையால் மனம் தளராவாறு சால்பு நிலைபெறச் செய்கிறது. சால்பு என்கிற மனவலிமை இருக்கும்போது பொருளில்லாமல் போவது ஒருவர்க்குத் தாழ்ச்சி ஆகாது.
3
கலை என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது சேவை என்பதை உணர்ந்து படமெடுக்கிற இயக்குனர்களில் முக்கியமானவர் ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களில் மட்டுமல்ல, தற்போது அவர் இயக்கி வரும் லாபம் படமும் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை உள்ளடக்கியதுதான். படப்பிடிப்பு முடிந்து ‘லாபம்‘ படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார் ஜனநாதன். இந்த நிலையில்தான் அந்த துயரம். வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தவரை பல மணி நேரங்கள் கழித்தே அறிந்த உதவி இயக்குனர் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜனநாதனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜனநாதனின் உடல்நிலை குறித்த இந்த தகவல் திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படியாவது அவர் உயிர் பிழைத்து வருவதுதான் திரையுலகத்திற்கும் இந்த சமூகத்திற்கும் – லாபம். இந்த படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளர் விஜய்சேதுபதி மட்டுமல்ல, மற்றொரு தயாரிப்பாளராக ஜனநாதனின் பங்கும் இருந்தது. ஒரு புறம் பொருளாதார ரீதியான டென்ஷன். இன்னொரு புறம் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர வேண்டும் என்கிற டென்ஷன். இரண்டும் கொடுத்த அழுத்தம்தான் அவரது இந்த நிலைக்கு காரணம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
20
ஆயுதம் - 134 கடை (இடங்கணி யென்னும் பொறிக் சூரியன் அதை உணர்ந்து மற்றொரு சம்மி குக் கல்லிட்டுவைக்கும் கூடை), தூண்டில் தையைச் செய்தான். அவ்வழியாகப் பின் (இது தூண்டில் வடிவாகச் செய்து அகழி வந்தார் அதைப் பரவச்செய்தனர். தன்வந் யிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் திரி, திவோதாசன், காசிராஜன், அச்வரி இழுத்துக் கொள்வது), தொடக்கு (கழுத் தேவர், நகுலன், சகதேவன், யமன், சியவ திற் பூட்டியிழுக்கும் சங்கிலி), ஆண்டலை னன், ஜனகன், புதன், சாவாலன், ஜாஜலி, யடுப்பு (சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பைலன், கா தன், அகத்தியன். இவர்கள் பறக்கவிட உச்சியைக் கடித்து மூளையை | வைத்திய நூலை முறையா யறிந்து வைத் எடுப்பது), கவை (இது கிடங்கிலேறின் தியசாத்திரம் இயற்றியோர். மறியத் தள்ளும் ஆயுதம்), கழு,புதை, (அம் ஆயுஷடோமேஷ்டி--ஆயுளை விரும்பினவன் புக்கட்டு), ஐயவித்துலாம் (இது பகைவர் | செய்யும் காமியயாகம். (பராச-மா கதவை அணுகாதபடி அம்புகள் வைத்தெய் ஆயுஷமநு - (சூ.) இருஷபரைப் பெற்றவர். யும் யந்திரம்). கைப்பெயர்ஊசி, (மதிற்ற ஆயுஷ்மந்தன்- அசுரன். பிரகலா தன் கும லையைப் பற்றுவாரைக் கையைப் பொதிர் -ரர்களி லொருவன். க்கும் ஊசி), எரிசிரல் (இது சிச்சிலி வடி ஆயை - சிவபக்தி மிகுதியால் புருஷனை வாய்க் கண்ணைக் கொத்தும் ஆயுதம்), பன்றி விட்டு நீங்கின ஒரு பெண். (இது மதிற்றலையில் ஏறினாருடலைக் கோட் ஆயோதநப்பிரவீண பாண்டியன் - துவி டாற் கிழிக்க இரும்பாற்செய்தது), பனை ராஜ குலோத்தம பாண்டியனுக்குக் கும் (மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற்கமை ரன். இவன் குமான் இராசகுஞ்சர பாண் த்த பொறி , எழு, சீப்பு, கணையம், கோல், டியன். குந்தம், வேல், சதக்னி, தள்ளிவெட்டி, ஆய் எயினன் - இவன் அகநானூற்றிற் பல களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழு விடங்களிற் கூறப்படுகின்றான். இவனைப் குப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, பாடியவர் பாணர் முதலியோர். வேள் சகடப்பொறி, தகர்ப்பொறி, அரி நூற் ஆயைப் பாடியவராகக் கூறப்பட்ட புலவர் பொறி, ஞாயில் (குருவித்தலை), பிண்டி கள் இவனைப் பாடியவராகக் காணவில்லை. பாலம், சூலம், எழு, மழு, வாள், கவசம், ஆயெயினனும் புலவர்க்குப் பேருபகாரியா தோமரம், கதை, தண்டம், நாராசம், இரு யிருந்தவனென்று தெரிகின்றது. இவன், ப்புமுள், கழுமுள், கூன்வாள், சிறுவாள், வேளாகிய ஆய் அண்டிரனின் வேறுபட்ட கொடுவாள், அரிவாள், ஈர்வாள், உடை வன். ''எயினன்'' என்னும் சொற்புணர்ப் வாள், கைவாள், கணையம், சுழல்படை, புடனேயே வழங்கப்படுகின்றான். வேள் கோடாலி, தோட்டி, வேல், வச்சிரம், ஆயைத் தனியே அண்டிரன்' எனவும் குறுந்தடி, ஈட்டி, கவண், சிறுசவளம், பெ கூறு தல்போல, இவனைத் தனியே எயி ருஞ்சவளம், சக்கரம், கன்ன ம், உளி, னன்' எனவும் வழங்குவர். இதனை பாசம், தாமணி, சாலம், ஊசி, முசுண்டி, "வண்மை யெயினன் வீழ்ந்தனன்" என முசலம், இடங்கணி, அள், பலகை முத வரும் அகநானூற்றடியால் ஆயண்டிர லியன. னின் முற்றும் வேறானவனென்பது அறிக. ஆயுதம் - அத்திரம், சத்திரம் என இரு அன்றியும் ஆயெயினன், மிஞ்ஞிலி என் வகை. அவை கைவிடு படை, கைவிடாப் பானோடு புரிந்த பெரும்போரில் உயிரிழந் படை என்பன. தவனென்பது, அகநானூற்றிற் பரணர் ஆயுதமகாராஜன்-சோபனை யென்னும் பாடல் பலவற்றால் அறியக்கிடக்கின்றது. பெண்ணின் தந்தை. இவன் மண்கே ஆய்- இவனுக்கு ஆய் அண்டிரன் எனவும் நாதன், தவளைகளுக் கரசன். பெயர். இவன் வேளாண் மரபினன். இவ ஆயுதிகன் - பதினாயிரம் காலாட்களுக்குத் னது ஊர் பொதிகைக் கருகிலுள்ள ஆய்க் தலைவன். (சுக்கிரநீதி) குடி யென்பது. கடையெழு வள்ளல்களுள் ஆயுர்வேதோற்பத்தி - பிரமன் நான்கு வே ஒருவன், சுரபுன்னை மாலையையுடையவன். தங்களையும் படைத்து அதன் சாரமாகிய இவ்வள்ளல் "வேளிர் " கூட்டத்தைச் ஆயுர்வேதத்தைப் படைத்தான். இவன் சேர்ந்தவனென்பது "மாவேள் ஆய்" ஆயுர்வேதத்தை ஐந்தாம் வேதா மாக்கி “தேர்வேள் ஆய்" எனப் புறநானூற்றில் அதைச் சூரியனுக் குப்தேசித்தான். அச் வருந்தொடர்களாற் றெரிகின்றது. அங் ஆயுதம் - 134 கடை ( இடங்கணி யென்னும் பொறிக் சூரியன் அதை உணர்ந்து மற்றொரு சம்மி குக் கல்லிட்டுவைக்கும் கூடை ) தூண்டில் தையைச் செய்தான் . அவ்வழியாகப் பின் ( இது தூண்டில் வடிவாகச் செய்து அகழி வந்தார் அதைப் பரவச்செய்தனர் . தன்வந் யிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் திரி திவோதாசன் காசிராஜன் அச்வரி இழுத்துக் கொள்வது ) தொடக்கு ( கழுத் தேவர் நகுலன் சகதேவன் யமன் சியவ திற் பூட்டியிழுக்கும் சங்கிலி ) ஆண்டலை னன் ஜனகன் புதன் சாவாலன் ஜாஜலி யடுப்பு ( சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பைலன் கா தன் அகத்தியன் . இவர்கள் பறக்கவிட உச்சியைக் கடித்து மூளையை | வைத்திய நூலை முறையா யறிந்து வைத் எடுப்பது ) கவை ( இது கிடங்கிலேறின் தியசாத்திரம் இயற்றியோர் . மறியத் தள்ளும் ஆயுதம் ) கழு புதை ( அம் ஆயுஷடோமேஷ்டி - - ஆயுளை விரும்பினவன் புக்கட்டு ) ஐயவித்துலாம் ( இது பகைவர் | செய்யும் காமியயாகம் . ( பராச - மா கதவை அணுகாதபடி அம்புகள் வைத்தெய் ஆயுஷமநு - ( சூ . ) இருஷபரைப் பெற்றவர் . யும் யந்திரம் ) . கைப்பெயர்ஊசி ( மதிற்ற ஆயுஷ்மந்தன் - அசுரன் . பிரகலா தன் கும லையைப் பற்றுவாரைக் கையைப் பொதிர் - ரர்களி லொருவன் . க்கும் ஊசி ) எரிசிரல் ( இது சிச்சிலி வடி ஆயை - சிவபக்தி மிகுதியால் புருஷனை வாய்க் கண்ணைக் கொத்தும் ஆயுதம் ) பன்றி விட்டு நீங்கின ஒரு பெண் . ( இது மதிற்றலையில் ஏறினாருடலைக் கோட் ஆயோதநப்பிரவீண பாண்டியன் - துவி டாற் கிழிக்க இரும்பாற்செய்தது ) பனை ராஜ குலோத்தம பாண்டியனுக்குக் கும் ( மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற்கமை ரன் . இவன் குமான் இராசகுஞ்சர பாண் த்த பொறி எழு சீப்பு கணையம் கோல் டியன் . குந்தம் வேல் சதக்னி தள்ளிவெட்டி ஆய் எயினன் - இவன் அகநானூற்றிற் பல களிற்றுப்பொறி விழுங்கும் பாம்பு கழு விடங்களிற் கூறப்படுகின்றான் . இவனைப் குப்பொறி புலிப்பொறி குடப்பாம்பு பாடியவர் பாணர் முதலியோர் . வேள் சகடப்பொறி தகர்ப்பொறி அரி நூற் ஆயைப் பாடியவராகக் கூறப்பட்ட புலவர் பொறி ஞாயில் ( குருவித்தலை ) பிண்டி கள் இவனைப் பாடியவராகக் காணவில்லை . பாலம் சூலம் எழு மழு வாள் கவசம் ஆயெயினனும் புலவர்க்குப் பேருபகாரியா தோமரம் கதை தண்டம் நாராசம் இரு யிருந்தவனென்று தெரிகின்றது . இவன் ப்புமுள் கழுமுள் கூன்வாள் சிறுவாள் வேளாகிய ஆய் அண்டிரனின் வேறுபட்ட கொடுவாள் அரிவாள் ஈர்வாள் உடை வன் . ' ' எயினன் ' ' என்னும் சொற்புணர்ப் வாள் கைவாள் கணையம் சுழல்படை புடனேயே வழங்கப்படுகின்றான் . வேள் கோடாலி தோட்டி வேல் வச்சிரம் ஆயைத் தனியே அண்டிரன் ' எனவும் குறுந்தடி ஈட்டி கவண் சிறுசவளம் பெ கூறு தல்போல இவனைத் தனியே எயி ருஞ்சவளம் சக்கரம் கன்ன ம் உளி னன் ' எனவும் வழங்குவர் . இதனை பாசம் தாமணி சாலம் ஊசி முசுண்டி வண்மை யெயினன் வீழ்ந்தனன் என முசலம் இடங்கணி அள் பலகை முத வரும் அகநானூற்றடியால் ஆயண்டிர லியன . னின் முற்றும் வேறானவனென்பது அறிக . ஆயுதம் - அத்திரம் சத்திரம் என இரு அன்றியும் ஆயெயினன் மிஞ்ஞிலி என் வகை . அவை கைவிடு படை கைவிடாப் பானோடு புரிந்த பெரும்போரில் உயிரிழந் படை என்பன . தவனென்பது அகநானூற்றிற் பரணர் ஆயுதமகாராஜன் - சோபனை யென்னும் பாடல் பலவற்றால் அறியக்கிடக்கின்றது . பெண்ணின் தந்தை . இவன் மண்கே ஆய் - இவனுக்கு ஆய் அண்டிரன் எனவும் நாதன் தவளைகளுக் கரசன் . பெயர் . இவன் வேளாண் மரபினன் . இவ ஆயுதிகன் - பதினாயிரம் காலாட்களுக்குத் னது ஊர் பொதிகைக் கருகிலுள்ள ஆய்க் தலைவன் . ( சுக்கிரநீதி ) குடி யென்பது . கடையெழு வள்ளல்களுள் ஆயுர்வேதோற்பத்தி - பிரமன் நான்கு வே ஒருவன் சுரபுன்னை மாலையையுடையவன் . தங்களையும் படைத்து அதன் சாரமாகிய இவ்வள்ளல் வேளிர் கூட்டத்தைச் ஆயுர்வேதத்தைப் படைத்தான் . இவன் சேர்ந்தவனென்பது மாவேள் ஆய் ஆயுர்வேதத்தை ஐந்தாம் வேதா மாக்கி “ தேர்வேள் ஆய் எனப் புறநானூற்றில் அதைச் சூரியனுக் குப்தேசித்தான் . அச் வருந்தொடர்களாற் றெரிகின்றது . அங்
38
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
54
கலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும். பாபாவின் உருவம் ஓர் அற்புதம்: கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. அவர் தமது வலது காலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடது கையினை வலது கால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். பாபாவின் இடது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே உள்ள வலது கால் பெருவிரலை இரண்டு மரக்கிளைக்கு நடுவே சூரியனைப் பார்ப்பது போல தரிசித்து பாபாவின் ஒளியைப் பெறலாம். மேலும் பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச் சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும். அதுவே சிறந்த பாபா வழிபாடு. உதியே மருந்து! ஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள். ராமரும் ஸாயியே! மண்மாடு என்னும் ஊரிலிருந்த ஒருவரைக் காண அவரது நண்பர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். வந்தவர், தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டர். அவரை ஷீரடி சென்று பாபாவை தரிசித்து வரலாம் என்று நண்பர் அழைத்தார். வந்திருந்த டாக்டரோ தீவிரமான ராமபக்தர். ஆதலால் நான் ராமனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் பாபாவை தரிசிக்க வர இயலாது என்று மறுத்தார். அந்த நண்பர் விடவில்லை. எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும் நாம் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் மட்டும் உள்ளே சென்று சாயிநாதனை தரிசித்து விட்டு வருகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும் என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டார். ஷீரடியில் பாபா இருந்த மசூதி வாசலில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார் பக்தர். டாக்டர் நண்பர் காரிலேயே இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டர், அங்கே சாட்சாத் ராமனே அமர்ந்திருந்ததைக் கண்டார். கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அதே காட்சி, உடனே காரிலிருந்து இறங்கி ஓடி, பாபாவின் காலில் விழுந்து ஹே சாய்ராம் என்று கதறி வணங்கினார். எல்லா தெய்வமும் நானே என்று பாபா சொல்வது உண்மையே என்பதை உணர்ந்து வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினார். ஷீரடி சாய்பாபாவின் உபதேசங்கள்! ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் முடிவுக்கு வந்துவிடும். அவன் அதன் பின்னர் பூரண சவுகரியத்தை அடைகிறான். பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள். இவ்வுலகை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன். என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும். என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும். என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன். என்னிடம் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைந்தவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன். நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாட்சிக்கிறேன். நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன். நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன். என்னுடைய பக்தர்கள் வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது. பாபாவின் மூல மந்திரம்! ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே ஸர்வலோக ஹிதங்கராய, ஸர்வதுக்க வாரகாய ஸர்வாபீஷ்ட பலப்ரதாயினே சமர்த்த சத்குரு சாயிநாத் ஸ்வாமினே வரவ-ரத ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹாசாயிபாபாவின் பன்னிரு திருப்பெயர்கள்! லோகத்ரய குரவே நமஹ, ஸர்வ பூஜிதாய நமஹ, ஸர்வஜிதே நமஹ, நீதிகர்த்தரே நமஹ, ஸர்வேசாய நமஹ, தயாவதே நமஹ, விச்வாத்மனே நமஹ, மகாபலாய நமஹ, சுபலக்ஷணாய நமஹ, மதிமதே நமஹ, ஸர்வாபீஷ்டதாய நமஹ, பரமகுருவே நமஹ ஷீரடி சாயிபாபாவின் இந்தப் பன்னிரு நாமாக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவர, மனதில் நிம்மதி நிறையும். ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்! 1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன. முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள். சிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. .அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது. ‘ எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான். ‘ ‘ஷீர்டி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்.‘ – பாபா அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ஸ.. ஜெய். ஷிர்டி சாய் பாபா பகுதி – 1 உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதிகாலையில், ஷிர்டி பாபா வசிக்கும் மசூதிக்குச் சென்ற யாரோ ஒரு பெண்தான், முதன்முதலில் அந்த விந்தையான காட்சியைக் கண்டிருக்கிறாள். உடனே ஓடோடி வந்து, பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்ல, விறுவிறுவென்று செய்தி பரவிவிட்டது. எல்லோரும் அவசர அவசரமாக பாபா வாழும் மசூதியை நோக்கி ஓடலானார்கள். பலருக்கு வேகமாக ஓட முடியாத நிலைஸ காலராவால் அவர்கள் உடல் மிகவும் தளர்ந்திருந்தது. சில நாட்களாகவே காலரா அந்த கிராமத்தில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. 1910ம் ஆண்டல்லவா அது! அப்போது காலராவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மருத்துவ வழி முறைகள் பிரபலமாகவில்லை. ஷிர்டி மக்கள், தங்கள் கிராமத்தில் வாழும் பாபாவையே சரணடைந்து வாழ்ந்தார்கள். தெய்வசக்தி, இந்த மண்ணில் பாபா என்ற மனித உடலில் இறங்கிப் பல திருவிளையாடல்களைப் புரிந்து வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நேற்றிரவு ஏராளமான பேர் அவர் வசிக்கும் மசூதிக்குச் சென்று தங்களைக் காலராவில் இருந்து காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தார்கள். பிறவிப் பிணியிலிருந்தே மக்களைக் காப்பாற்றக் கூடியவர், உடல் பிணியிலிருந்து காப்பாற்ற மாட்டாரா? பாபா தெய்வீகப் புன்முறுவலோடு பேசலானார்: நீங்களெல்லாம் என் குழந்தைகள் இல்லையா! உங்களைக் காப்பாற்றத் தானே உலகிற்கு வந்திருக்கிறேன்! படைத்தல், காத்தல், அழித்தல் என்று நான் செய்யும் முத்தொழிலில் காத்தல் தொழிலை நான் நிகழ்த்துவதற்கான காலம் அல்லவா இது! குழந்தைகளே! தீய சக்திகள் தான் உலகில் நோயைப் பரப்புகின்றன. நோய்க்கு மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. கிளையை வெட்டினாலும் மரம் மீண்டும் வளரும். மரத்தை அழிக்க மரத்தின் வேரை அழிக்க வேண்டும். நீங்கள் நோய்க்கு உங்களால் இயன்ற மருந்து சாப்பிடுங்கள். அது கிளையை வெட்டும் வேலை. ஆனால், நோயை உண்டுபண்ணும் பகைச் சக்தி என்ற மரத்தின் வேரை அல்லவா வெட்ட வேண்டுமல்லவா! அந்தச் செயலை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் மனத்தில் உள்ள காமம், குரோதம் முதலிய பகைச் சக்திகளை நீங்கள் வெட்டிச் சாய்த்துவிட்டால் உடல் பிணி மட்டுமல்ல, பிறவிப் பிணியே குணமாகிவிடும்,. அமிர்தத் துளிகள் போல் பாபா பேசிய பேச்சைக் கேட்டு மக்கள் நிம்மதியோடு வீடு திரும்பினார்கள். இதெல்லாம் நேற்றின் கதை. ஆனால், இன்று அதிகாலை பாபாவைப் பற்றி விந்தையான அந்தச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாள் அவரைக் காலையில் தரிசித்த பெண்மணி. அடியவர் கூட்டம் பாபா முன் குழுமியது. அவர் மாவரைக்கும் கல் இயந்திரத்தின் முன்னால் கால்நீட்டி அமர்ந்திருந்தார். பக்கத்தில் முறத்தில் கோதுமை குவிக்கப்பட்டிருந்தது. அவர் ஒரு சாக்கைத் தரையில் விரித்து, அதன் மேல் திருகையை வைத்திருந்தார். இந்த யந்திரம், இந்தச் சாக்கு, இந்தக் கோதுமை எல்லாம் எங்கிருந்து தான் வந்ததோ! அவர் காற்றிலிருந்து கூட எதையும் வரவழைக்கும் ஆற்றல் உள்ளவர் அல்லவா! தன் நீண்ட அங்கியின் கைப்புறத்தை மடித்துவிட்டுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கோதுமையை எடுத்துத் திருகையின் மேலிருந்த குழியில் போட்டார் பாபா. பின் கோதுமையை மாவாக அரைக்கலானார். அரைபட்ட மாவு வழிந்து கீழே கொட்டத் தொடங்கியது. பாபாவின் முகத்தில் சீற்றம். அவர் அழுத்தி அழுத்தி திருகையின் மரக் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டே கோதுமையோடு பேசத் தொடங்கினார்.ம்! ஓடு! இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விடு! என் குழந்தைகளையா துன்புறுத்துகிறாய்? என்ன தைரியம் உனக்கு? இவர்கள் பக்கம் நீ கையை நீட்டினால், நீதான் அரைபட்டுச் சாகவேண்டும். புரிகிறதா? இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன செய்வது? முதலிலேயே அல்லவா புத்தி வந்திருக்க வேண்டும்? இந்த எல்லைக்குள் இனி வரக்கூடாது. சத்தியம் செய்துகொடு. ம். ஓடியே போய்விடு! – பாபா இப்படி ஏதேதோ சொன்னவாறே, அந்த யந்திரத்தின் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தார். அரைபட்ட கோதுமை மாவு சரசரவெனக் கீழே கொட்டியது. பாபா கைவலிக்க மாவரைப்பதைப் பார்த்துக் கூட்டத்திலிருந்த சில பெண்மணிகள் ஓடோடி வந்தார்கள். பாபா! இந்த வேலை எல்லாம் உங்களுக்குப் பழக்கமில்லை. உங்களுக்குக் கைவலிக்கும். சற்றுத் தள்ளிக்கொள்ளுங்கள். நாங்கள் அரைக்கிறோம். அவர்கள் அன்பால் விளைந்த உரிமையோடு பாபாவின் கையைப் பிடித்து நகர்த்தி விட்டு, திருகையின் மரப்பிடியைப் பிடித்து அரைக்கலானார்கள். பாபா சிரித்தவாறே அவர்கள் மாவரைக்க அனுமதி அளித்துவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டார். பாபா சிரிக்காமல் என்ன செய்வார்? அண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளுக்கு மாவரைக்கும்போது கைவலிக்கும் என்று பதறுகிறார்களே இந்தப் பெண்கள்! ஆனால், அந்தப் பெண்கள் தன்மேல் செலுத்திய பக்தி, பாபாவின் மனத்தில் கல்கண்டாய்த் தித்தித்தது. பாபா அடியவர்களிடமிருந்து பக்தியை மட்டும் தானே எதிர்பார்க்கிறார்! எத்தனையோ அடியவர்கள் அவருக்கு என்னென்ன பொருட்களையோ காணிக்கையாய்க் கொண்டு வருகிறார்கள். ஜகஜ்ஜோதியாய் அகில உலகையும் தன் பிரகாசத்தால் துலங்கச் செய்யும் சூரியனுக்கு, கற்பூர ஆரத்தி காண்பிப்பது மாதிரி! அடேய். நான் கேட்பது உன் தீய குணங்களை. அதைக் கொண்டுவந்து என் காலடியில் போடு. இனித் தீய நினைவுகளில் கூட ஆழமாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடு!- பாபாவின் கண் பார்வை பக்தர்களை அதட்டுகிறதுஸ. எல்லா கோதுமையும் அரைபட்டதும் மாவை என்ன செய்யவேண்டும் எனப் பணிவோடு கேட்கிறார்கள் பெண்கள். மாவை நான்கு கூறாகப் பிரியுங்கள். ஷிர்டி கிராமத்தின் நான்கு எல்லைகளிலும், இந்த மாவை வேலி போல் தூவிவிட்டு வாருங்கள். உடனடியாக இதைச் செய்யுங்கள்! வந்த கூட்டம் மொத்தமுமே நான்காகப் பிரிந்தது. அந்த மாவு பயபக்தியோடு கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் வேலிபோல் தூவப்பட்டது. மறுகணம் காலரா அந்த எல்லையைத் தாண்டி வெளியேறிவிட்டது. காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆரோக்கியம் அடைந்தார்கள். பாபாவின் பாதங்களில் பணிந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள். பாபா அரைத்தது கோதுமையை அல்ல. காலராவைத் தூண்டிய தீய சக்தியை! இப்படி ஷிர்டி பாபா செய்த அற்புதங்கள் எத்தனையோஸபாபாவின் புனிதத் திருச்சரிதமே அற்புதமானது. சுந்தரகாண்டம் போல், நாராயணீயம்போல் ஷிர்டி பாபாவின் சரித்திரமும் பாராயணம் செய்வதற்கு உரியது. அந்தச் சரிதத்தைப் படிக்கும் அனைவருக்கும் எல்லா மங்கலங்களையும் தரக் கூடியது. கடவுளே மனித வடிவெடுத்த அந்த மகானின் புனிதத் திருச்சரிதம் இனிஸ பகுதி – 2 ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, பாபாவடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது, அந்த ஊர் மக்கள் செய்த அதிர்ஷ்டம். நல்லவர்கள் அதிகமுள்ள இடத்தை இறைவன் விரும்புவது இயற்கைதானே! ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வேப்பமரம். அதிகாலையில் காலாற நடந்துசென்று அந்த வேப்பமரக் குச்சியை ஒடித்து, பலர் ஒருவருக்கொருவர் பேசியவாறே பல் துலக்குவது உண்டு. அப்படியான ஓர் அதிகாலைஸ வேப்ப மரத்தடிக்கு வந்த சிலர் வியப்போடு மரத்தடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கலானார்கள். காலையில் சூரியன் தோன்றும். ஆனால், இன்று அங்கே ஒரு வெண்ணிலவல்லவா தோன்றியிருக்கிறது! பளீரென்று பிரகாசமாக ஓர் இளைஞன் மர நிழலில் சாந்தி தவழும் முகத்தோடு அமர்ந்திருந்தான். மானிடனாஸ இல்லை தேவனாஸ இத்தனை பேரழகை மனிதர்களிடம் பார்க்க முடியுமா! கண்ணும் மூக்கும் பிற அங்கங்களும் சேர்ந்து யாரோ சிற்பி சர்வ லட்சணமான ஒரு சிற்பத்தைச் செய்து அங்கே கொண்டுவைத்த மாதிரியல்லவா இருக்கிறது! அவனைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. பார்த்த கண்கள் தித்தித்தன. அந்த வாலிபன் முகத்தில் தென்பட்ட தூய்மையும் குழந்தைத்தனமும் பார்ப்பவர் நெஞ்சங்களை அள்ளிச் சாப்பிட்டன. அப்படியொருவன் அங்கே அமர்ந்திருக்கிறான் என்ற செய்தி விறுவிறுவென அந்தச் சிற்றூரில் எங்கும் பரவியது. எல்லோரும் வேப்ப மரத்தடியில் ஒன்றுகூடி விட்டார்கள். இந்த அழகான பெரிய பொம்மை பேசுமா? வியப்போடு சில குழந்தைகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதுவரை எங்கிருந்தான்? இப்போது திடீரென்று எங்கிருந்து இங்கு வந்தான்? இவன் யார்? மனத்தை மயக்குகிறதே இவன் தோற்றம்? வயது பதினைந்து அல்லது பதினாறு இருக்குமா? இப்போது இவன் இங்கே வந்திருப்பதன் நோக்கமென்ன?நேரம் கடந்து கொண்டிருந்தது. வெய்யில் ஏறத் தொடங்கிவிட்டது. அவன் எல்லோரையும் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தவாறே அமர்ந்திருந்தான். யாரப்பா நீ? என்று யாராவது விசாரிக்க வேண்டாமோ? யாருக்கும் என்ன கேட்பதென்றே தோன்றவில்லை. திகட்டத் திகட்ட அவனது அருள்பொங்கும் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள் அனைவரும். அவர்களிடையே கணபதிராவ் கோட்டி படேல் என்பவரும் அவரது மனைவி பாய்ஜா பாயியும் நின்றிருந்தார்கள். திடீரென பாய்ஜா பாயி பதட்டம் அடைந்தாள். அவனைப் பார்க்கும்போது குழந்தைஇல்லாத அவள் மனத்தில் தாயன்பு பொங்கியது. இந்தப் பிள்ளை சாப்பிட்டானோ! இல்லையோ! பசிக்குமே இவனுக்கு! அவள் தன் கணவரிடம், ஒருநிமிஷம், இதோ வந்துவிட்டேன்! என்றவாறே வீட்டுக்கு ஓடினாள். அவசர அவசரமாக நான்கைந்து சப்பாத்திகளைத் தயார் செய்தாள். தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் சப்ஜியும் தயாரித்தாள். அவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு லோட்டாவில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு மீண்டும் வேப்பமரத்தடிக்கு ஓடி வந்தாள். கூட்டத்தின் நடுவே புகுந்து இளைஞன் அரு@க வந்து சேர்ந்தாள். வியர்வை வழிந்த முகத்தை முந்தானையால் ஒற்றிக்கொண்ட அவள், மகனே! நீ எப்போது சாப்பிட்டாயோ.. என்னவோ? கொஞ்சம் சப்பாத்தி எடுத்துக்கொள் அப்பா! என்றவாறே பாத்திரத்தைத் திறந்து அவன்முன் வைத்தாள். அவன் அவளையே பாசம் பொங்கப் பார்த்தவாறிருந்தான். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று நினைக்கிறாளே! இவளின் இந்த உணர்வில் அல்லவா இறைவன் குடியிருக்கிறான்! அவன் தேனை விட இனிமையான தெய்வீகக் குரலில் பேசலானான்: பாய்ஜாபாயி! நீ செய்த சப்பாத்தியைச் சாப்பிடக் கசக்குமா? உன்னைப்போல் சமைக்க இந்த ஊரில் யாருண்டு? என்றவாறே சப்பாத்திப் பாத்திரத்தைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டான். பாய்ஜாபாயிக்கு மட்டுமல்ல, கூட்டத்தினர் அனைவருக்குமே மயக்கம் வரும்போல் இருந்தது. பாய்ஜாபாயியின் பெயர் இவனுக்கு எப்படித் தெரிந்தது! அகில உலகங்கள் அனைத்தையும் படைத்து ரட்சிக்கும் ஆண்டவனுக்குத் தன் குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரும் தெரியாமலா இருக்கும்! இளைஞன் தொடர்ந்து பேசலானான்: அம்மா! உன் சப்பாத்தியை எனக்கும் முன்னால், என் அண்ணா சாப்பிட வேண்டாமா? அவனுக்கும் பசிக்குமே? அவனுக்குக் கொடுத்துவிட்டு மீதியை நான் சாப்பிடுகிறேன்! இவனுக்கு ஓர் அண்ணாவா? யார் அந்த அண்ணா? கூட்டம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியை நோக்கிக் கூவினான்:அண்ணா! ஓடிவா. வந்து சாப்பிட்டு விட்டுப் போ! அடுத்த கணம் வெள்ளைவெளேர் என்ற ஒரு பன்றி காட்டுக்குள்ளிருந்து பாய்ந்து ஓடிவந்தது. கூட்டம் விலகி வழிவிட்டது. அவ்வளவு அழகான பன்றியை யாரும் அதற்குமுன் பார்த்ததே கிடையாது. இது பன்றியா! இல்லை வராக அவதாரமே தானா! வாலைக் குழைத்துக்கொண்டு நின்ற பன்றி, இளைஞன் தூக்கிப்போட்ட இரண்டு சப்பாத்திகளைத் தாவிப் பிடித்துத் தின்றது. பின் ஒரே ஓட்டமாகக்காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டது! இந்த இளைஞன் யார்? கடவுளே தானா? அப்படியானால் இந்தச் சம்பவத்தின் மூலம் கடவுள் எதை உணர்த்த விரும்புகிறார்? மனிதர்கள் மட்டுமல்ல, ஜீவராசிகள் அனைத்துமே தன் குழந்தைகள் தான் என்கிறாரா? விலங்குகளிடமும் நீங்கள் அன்பாயிருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறாரா? எஞ்சியிருந்த சப்பாத்திகளைச் சாப்பிட்ட இளைஞன் லோட்டாவில் இருந்த நீரால் கைகழுவினான். பின் மிகுந்த சொந்தத்தோடு சிரித்தவாறே, பாய்ஜாபாயியின் சேலை முந்தானையில் ஈரக் கையைத் துடைத்துக் கொண்டான். அந்த முந்தானை பெற்ற பாக்கியமே பாக்கியம். அந்தக் காட்சியைப் பார்த்த பிற பெண்கள், பாய்ஜா பாயியைப் போல் தங்களுக்கு சப்பாத்தி எடுத்துவரத் தோன்றவில்லையே என ஏங்கினார்கள். அங்கிருந்த அத்தனை பெண்மணிகளும் கோகுலத்தில் குழந்தைக் கண்ணனைக் கண்ட தாய்மார்களின் மனநிலையை அடைந்தார்கள். வந்திருப்பது யார்? கண்ணனே தானா? ஆனால், கையில் குழலைக் காணோமே? கையில் இல்லாத குழல் அவன் குரலில் இருந்ததுபோல் தோன்றியது. அவ்வளவு இனிமையாக அவன் பேசலானான்: பாய்ஜா பாயி! இவ்வளவு ருசியான சப்பாத்தியை நாள்தோறும் சாப்பிடும் உன் கணவர் கணபதிராவ் கொடுத்துவைத்தவர்தான்! அடடே. கணபதிராவ் பெயரும் இவனுக்குத் தெரிந்திருக்கிறதே? அடுத்த கணம் அங்கே வந்து கூட்டத்தோடு நின்றிருந்த அவ்வூர்க் கோயில் பூஜாரிமேல் அருளாவேசம் வந்தது. மக்கள் படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டே பூஜாரியைப் பார்த்தார்கள். பூஜாரி முழங்கினார். இந்த இளைஞன் யார் என்று தெரிந்துகொள்ள, இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டிப் பாருங்கள்! இதைக் கேட்ட இளைஞன் கலகலவென்று நகைத்தான். அப்படியே ஆகட்டும். தோண்டுங்கள்! என்றவாறே வேப்பமரத்தை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். சிலர் ஓடோடிப்போய் கடப்பாரையை எடுத்துவந்து வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்ட எத்தனித்தார்கள். அப்போது யாரோ பெருமூச்சோடும் கோபத்தோடும் சீறும் ஒலி கேட்டது. கடப்பாரையைத் தூக்கியவர்கள் திகைத்துப் பின்வாங்கினார்கள்ஸ பகுதி – 3 ஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் தொடங்கினார்களே சிலர்! அப்போதுதான் யாரோ சீற்றத்தோடு பெருமூச்சு விடும் ஒலி கேட்டதுஸ வேப்பமரத்தின் அருகாக இருந்த பாம்புப் புற்றிலிருந்து ஒரு ராஜநாகம் பெருமூச்சோடு உர்ரென்று தலையைத் தூக்கிச் சீறியது. அத்தனை பெரிய நாகப்பாம்பை யாரும் அதுவரை பார்த்ததில்லை. அதன் குடைபோல் விரிந்தபடத்தையும் பளபளவென மின்னும் வழவழப்பான வசீகரத் தோற்றத்தையும் வியந்து பார்த்த மக்கள், நாகராஜா! எங்களைக் காப்பாற்று! என்று முணுமுணுத்தவாறே கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். வேப்ப மரத்தடியிலிருந்து இப்போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இளைஞன், நாகராஜாவைக் கனிவோடு பார்த்தான். சரி.. சரிஸ நான் சொல்லித்தான் இவர்கள் தோண்டுகிறார்கள். நீ கோபம் கொள்ள வேண்டாம்! அமைதியாக இரு! என்று நாகப்பாம்பிடம் சொன்னான்! பாம்போடு பேச முடியுமா? அவன் பேசினானே! அந்தப் பாம்பும் அவன் பேச்சைப் புரிந்துகொண்டதே! புற்றைவிட்டு மெல்ல ஊர்ந்து வெளிப்பட்ட ராஜநாகம், இளைஞன் அமர்ந்திருந்த இடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வலம் வந்தது. பின் அவன் பாதங்களில் தலைவைத்து நமஸ்கரித்தது. பிறகு மறுபடி அதே புற்றுக்குள் போய் மறைந்துவிட்டது! இந்த விந்தையான காட்சியைப் பார்த்த பெண்மணிகள் கன்னத்தில் கைவைத்து, என்னடியம்மா இது! அதிசயமாக இருக்கிறது! என்று வியப்பில் ஆழ்ந்தார்கள். இளைஞன் கலகலவெனச் சிரித்துக் கொண்டே நடக்கட்டும்! வேப்ப மரத்தின் வேரை வெட்டிவிடாதீர்கள். அது இந்த ஊரின் காவல் மரம்! என்று எச்சரித்து, தோண்டுகிறவர்களுக்கு உத்தரவு கொடுத்தான். மணிநாதம் போன்ற இளைஞனின் சிரிப்பில் மயங்கிய அவர்கள், பின் சுதாரித்துக் கொண்டு மறுபடி தோண்டத் தொடங்கினார்கள். மண்ணுக்குள்ளே அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மண்ணை மெல்ல மெல்லத் தள்ளிவிட்டுப் பார்த்தபோது, உள்ளே தென்பட்டது ஒரு குகை. அந்த அழகிய குகையில் நான்கு மாடங்கள் இருந்தன. நான்கு மாடங்களிலும் நான்கு தனித்தனி அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. அதை விட ஆச்சரியம்! அந்த விளக்குகள் ஒவ்வொன்றும் அப்போதுதான் ஏற்றி வைக்கப்பட்டதுபோல் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. மூடிய குகைக்குள் விளக்கை ஏற்றிவைத்தது யார்? மண்மூடிய குகைக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது எப்படி? குகை நடுவே ஒரு மரப் பலகை வைக்கப் பட்டிருந்தது. மிகச் சில கணங்கள் முன்னால் வரை, யாரோ ஒரு ரிஷி அதில் அமர்ந்து தவம் செய்திருக்க வேண்டும். அந்த ரிஷி யார்? இப்போது அவர் எங்கே போனார்? அன்றலர்ந்த மலர்களால் அந்தப் பலகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பலகையின் மேலே ஒரு ஜபமாலை. அந்த ரிஷி பயன்படுத்திய ஜபமாலையாக இருக்கலாம். குகை முழுவதும் கமகமவென ஒரு மனோகரமான நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மண்ணால் மூடியிருந்த குகை இப்போது திறக்கப்பட்டதால் அந்த மணம் வெளியேயும் பரவி, கிராமம் முழுவதையும் வாசனை நிறைந்ததாக மாற்றியது. மண்ணைத் தோண்டி குகையைக் கண்டு பிடித்தவர்கள் மேலே ஏறி வெளியே வந்து தாங்கள் கண்ட அதிசயக் காட்சியை இளைஞனிடமும் மக்களிடமும் சொன்னார்கள். ஏற்கனவே தெரிந்த விஷயத்தைக் கேட்பதுமாதிரி, அவர்கள் சொன்னவற்றைச் சிரித்துக் கொண்டே கேட்டான் இளைஞன். சரிஸ. பூஜாரி சொன்னபடி மண்ணைத் தோண்டிப் பார்த்தாயிற்று அல்லவா? இனி அந்த இடத்தை முன்போல் மண்போட்டு மூடிவிடுங்கள்! இனி எக்காரணம் கொண்டும் இந்த இடத்தைத் திறக்காதீர்கள்! ஒரே ஒருமுறை திறந்து பார்க்க மட்டும்தான் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது! அவன் எச்சரிப்பதுபோல் கூறினான். குகை மிகுந்த கவனத்தோடு மறுபடி மண்போட்டு மூடப்பட்டது. மக்களின் முகங்களில் தென்பட்ட கேள்விக்குறியைப் பார்த்து, இளைஞன் விளக்கம் தருவதுபோல் பேசலானான்: உள்ளே இருக்கும் குகை, குருநாதர் தவம் செய்யும் குகை. உலக ர்க்ஷமத்திற்காக அவர் எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார். அடிக்கடி மண்ணைத் திறந்து குருநாதர் தவத்தைக் கலைக்கலாகாது. இந்த வேப்ப மரத்தின் வெளியில் நாள்தோறும் விளக்கேற்றி வையுங்கள். வியாழக்கிழமை மறக்காமல் ஊதுபத்தி ஏற்றி வழிபடுங்கள். இச் செயல்கள் காரணமாக கிராமத்திற்கு மங்கலங்கள் பெருகும். அனைவரும் சுபிட்சமாக வாழ்வீர்கள். சரிஸ நீங்கள் எல்லோரும் இப்போது வீட்டுக்குச் செல்லலாம். நாளை அதிகாலை வரை யாரும் மறுபடி இங்கு வரவேண்டாம்! இளைஞனின் கண்டிப்பான குரலைக் கேட்டும், அந்தக் குகை பற்றிய வியப்பில் தோய்ந்தும் மக்கள் மெல்ல மெல்லக் கலைந்தார்கள். இளைஞன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து நிர்ச்சலனமான தியானத்தில் ஆழ்ந்தான். மக்கள் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். குகையில் குருநாதர் தவம் செய்வதாய்ச் சொன்னானே? யார் அந்த குருநாதர்? இவனே தானா? நினைத்தாலே சாந்தி தரும் அவன் திருமுகத்தை மனத்தில் தேக்கியவர்களாய் அனைவரும் மனமில்லாமல் தங்கள் இல்லம் நோக்கி நடந்தார்கள். அந்த இளைஞனுக்குச் சாப்பிடச் சப்பாத்தி கொடுத்த பாய்ஜா மாயி, இரவில் தன்னந்தனியே இவன் இங்கே தியானத்தில் ஆழ்ந்திருக்கப் போகிறான் போலிருக்கிறதே? பாம்புப் புற்று வேறு அருகில் இருக்கிறதே! இறைவா! எந்த ஆபத்தும் வராமல் இவனைக் காப்பாற்று! என்று உளமார வேண்டிக்கொண்டாள். இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடமே வேண்டிக் கொள்ளும் அவளின் வெகுளித்தனத்தை என்னென்பது! மறுநாள் அதிகாலை எழுந்தவுடன், இளைஞனை மீண்டும் தரிசிக்கும் ஆவலில் ஓடோடி வந்தாள் பாய்ஜாமாயி. ஊர்மக்கள் அனைவரும் அவளைத் தொடர்ந்து வந்து அதே வேப்பமரத்தடியில் மறுபடி கூடினார்கள். ஆனால், அந்த இளைஞன் அங்கே இல்லை. அதுமட்டுமல்ல, அவன் நேற்று அங்கே இருந்ததற்கான சுவடு கூட இல்லை. ஏன்ஸ நேற்று வேப்ப மரத்தடியில் தோண்டிப் பார்த்து பின் புதுமண்ணைப் போட்டு மூடினார்களே? வேப்ப மரத்தடி பழையபடி தான் இருந்ததே தவிர, தோண்டிப் பார்த்து மறுபடி மூடியதற்கான அறிகுறி எதுவுமே அங்கு தென்படவில்லை! அப்படியானால் நேற்று நடந்ததுதான் என்ன? அது உண்மையாஸ இல்லை.. மாயத் தோற்றமா? ஏராளமான மக்கள் ஒன்று சேர்ந்து பார்த்தது மாயத் தோற்றமாக இருக்குமா? ஆனால், இப்போது நினைத்துப் பார்த்தால், இந்த உலகமே மாயத் தோற்றம் என்றும், அந்த இளைஞன் ஒருவன் மட்டும் தான் உண்மை என்றும் அல்லவா தோன்றுகிறது? இந்த வேப்பமரத்தடியை மீண்டும் தோண்டிப் பார்த்தால் என்ன? அந்த இளைஞன் மரத்தடியை மறுபடி தோண்டக் கூடாது என்றல்லவா உத்தரவு போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்? அந்த தெய்வீக இளைஞன் மறுபடி வருவானா? ஷிர்டி மக்கள் அனைவரும் அவன் மறுபடி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யலானார்கள். நாள்தோறும் அவன் சொன்னபடி அந்த வேப்பமரத்தடியில் விளக்கேற்றி வைத்து அவனது தரிசனத்திற்காக ஏங்கிக் காத்திருந்தார்கள். அந்த இளைஞன் வந்தானா?
59
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
68
3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார். 5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது. எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது. கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாலிபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் டாக்டர்களுக்கு தெரியவந்தது. அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது தெரியவந்தது. ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 3 நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
72
ஹாலிங்பெல் அலறியது. தூங்கிக்கொண்டிருந்த பவித்ரா சட்டென்று கண் விழித்தாள். பக்கத்தில் கணவனும், குழந்தையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இரவு 1 மணி. இந்த நேரத்தில் யார் ஹாலிங் பெல் அடிப்பது என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அண்ணனின் மகள் ஷாலு முகம் முழுக்க கோபத்துடன் நிற்பது தெரிந்தது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். வீட்டு வாசலுக்கு வெளியே அவள் வந்த ஸ்கூட்டி தாறுமாறாகக் கிடந்தது. ஏதோ சண்டை நடந்திருக்கிறது, கடும் கோபத்தில் வீட்டைவிட்டு ஓடிவந்திருக்கிறாள் என்பது புரிய, சட்டென்று கதவைத் திறந்து உள்ளே இழுத்தாள். ’’அத்தை, உங்க அண்ணன் போன் செஞ்சா, நான் இங்கே இல்லைன்னு சொல்லணும், அதுக்கு சரின்னா… இருக்கேன். இல்லைன்னா சொல்லுங்க, எனக்குன்னு ஆளுங்க இருக்காங்க… நான் போய்க்கிட்டே இருக்கேன்…’’ இன்னமும் சூடாக குதித்தாள். அவள் சொல்லி முடிக்கும் முன்னரே செல்போன் சிணுங்கியது. சட்டென்று எடுத்துப் பேசினாள். ’’என்னண்ணா..?’’ …………………………….. ’’எதுக்கு அவகிட்டே சண்டை போடுறே…?” …………………………… ’’சரி, வந்தா சொல்றேன். யாராவது ஃப்ரண்ட் வீட்டுல பத்திரமா இருப்பா. காலையில பேசிக்கலாம், இப்ப யாரையும் எழுப்பாம நிம்மதியா தூங்கு’’ என்று செல்போனை அணைத்துவைத்தவள், ‘’ பதறிப்போய் கேட்குறாரு…’’ என்றாள். ’’ம்.. நான் எங்காவது விழுந்து செத்தா நல்லதுன்னு நினைப்பாரு உங்க அண்ணன், அவருக்கு ஜோடியா வந்து சேர்ந்திருக்கு பாரு, அம்மான்னு எனக்குன்னு…’’ என்றபடி சோபாவில் அமர்ந்தாள். ’’ஏதாவது சாப்பிட்டியா.. ஏதாச்சும் ரெடி செய்யவா?’’ ’’அதெல்லாம் முடிஞ்சதும்தான் சண்டை…’’ ’’என்னதான் உன் பிரச்னை…’’ என்றபடி ஷாலுவின் அருகே அமர்ந்து அவள் கைகளைப் பற்றியதும் ‘கோ’வென அழத்தொடங்கினாள். அவள் அழுதுமுடிக்கட்டும் என்று அமைதியாக காத்திருந்தாள் பவித்ரா. ’’என் மேல யாருக்கும் அன்பே இல்லை. நான் மெடிக்கல் படிக்கிறேன்னு சொன்னேன். கொஞ்சம் மார்க்ல போயிடுச்சு, எப்படியாவது பணம் கட்டி சீட் வாங்கியிருக்கலாம். அதுதான் இல்லை. அவங்க சொன்னதுக்காகத்தான் பி.எஸ்.சி. சேர்ந்தேன். இப்ப எதுக்கெடுத்தாலும் சந்தேகம், கோபம். ஃப்ரண்ட்ஸ்கூட பீச்சுக்குப் போகக்கூடாதாம், வெளியே சுத்தக் கூடாதாம்… என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கோவா போறாங்க, என்னை போகக்கூடாதுன்னு சொல்றாங்க..’’ ’’அதான் சண்டையா?’’ ’’அது போன மாசமே முடிஞ்சிடுச்சு, இப்போ போன் புதுசு வாங்கித்தர மாட்டாங்களாம்.. எல்லாப் பொண்ணும் மூணு மாசத்துக்கு ஒண்ணு மாத்துறாங்க, நான் இதை வச்சிக்கிட்டே ரெண்டு வருஷமா அழுவுறேன். ஒன் ப்ள்ஸ் புதுசா வந்திருக்கு, வாங்கித்தர மாட்டாங்களாம். போன வாரம் ட்ரெஸ் வாங்கித்தர்றேன்னு கூட்டிட்டுப் போனாங்க. ஏழாயிரம் ரூபாய்க்கு வாங்கித்தர மாட்டாங்களாம். நாளைக்கு என் ஃப்ரண்ட் ஒருத்திக்கு பர்த் டே. எல்லோரும் சேர்ந்து கிஃப்ட் வாங்கித் தரப்போறோம், அதனால ரெண்டாயிரம் கேட்டா சண்டைக்கு வர்றாங்க, நாளைக்கு நைட் 12 மணிக்கு சர்ப்ரைசா அவ வீட்டுக்குப் போகவும் விட மாட்டாங்களாம், அதான் இன்னைக்கே ஓடி வந்துட்டேன்… இனிமே நான் அங்கே போறதா இல்லை. காலையில என் ஃப்ரண்ட்ஸ்கூட சேர்ந்து ஏதாச்சும் ஒரு ஹாஸ்டல்ல தங்கப் போறேன்… இன்னைக்கு ஒரு நைட் மட்டும் இடம் குடுத்தா போதும்…’’ என்று கண் நிறைய அழுகையுடன் பேசி முடித்தாள். டீன் ஏஜ் வயதுக்கே உரிய பிடிவாதம். நிஜம் தெரியாத வயசு. இப்போது அவளிடம் என்ன பேசினாலும், அதற்கு ஒரு பதில் வைத்திருப்பாள் என்பதால், அத்தனையையும் அமைதியாக கேட்டுவிட்டு எழுந்தாள். ’’நான் இத்தனை தூரம் சொல்றேன், கேட்டுட்டு பேசாமப் போறீங்க, நீங்களும் உங்க அண்ணனுக்குத்தான் சப்போர்ட்டா…?’’ என்று ஷாலு எழுந்தரிக்க முயல, சட்டென்று அவளருகே மீண்டும் அமர்ந்தாள். ’’இல்லேம்மா… திடீர்னு நைட் 12 மணிக்கு வயசுப் பொண்ணு வெளியே போறதை அண்ணனால ஏத்துக்க முடிஞ்சிருக்காது, ஆமா , நீ பொண்ணுங்ககூட மட்டும்தான போறே…’’ ’’ம்… கிளாஸ்ல பசங்க படிக்க மாட்டாங்களா, அவங்களும்தான் வருவாங்க, ஒரு பையன் கார்ல கூப்பிட வருவான், நாலு பசங்க மூணு பொண்ணுங்க சேர்ந்து நைட் 12 மணிக்கு என் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய் கேக் வெட்டிட்டு ஜாலியா கொஞ்சநேரம் பேசிட்டு நைட் 2 மணிக்கு வந்துடுவோம்…’’ ஷாலுவின் அசட்டுத் துணிச்சலைக் கேட்க பயமாக இருந்தாலும், அதை சொல்லமுடியாமல் வெறுமனே சிரித்துவைத்தாள். ’’நான் செகண்ட் ஷோ போறதுக்கே எங்கண்ணன் விட மாட்டான், நான் பேசுறேன்.. .நீ தூங்கு..’’ ’’இல்லை, நான் வீட்டுக்குப் போகமாட்டேன்’’ என்றாள். ’’சரிம்மா… நீ வீட்டுக்குப் போகவேண்டாம், காலையில பார்த்துக்கலாம்… ரெஸ்ட் ரூம் போயிட்டு வா… நான் போர்வை எடுத்துட்டு வர்றேன், ரெண்டு பேரும் ஹால்ல படுத்துக்கலாம்” என்றபடி எழுந்தாள். ஷாலு பாத்ரூம் போய்வர பாலை சுட வைத்துக் கொடுத்தாள். முகத்தைக் கழுவிவிட்டு பளீச்சென வந்து பெட்ஷீட்டில் அமர்ந்த ஷாலு கையில் பாலை கொடுத்ததும், ஆர்வமாக வாங்கிக் குடித்தாள். ’’தேங்க்ஸ் அத்தை… எங்கே பாலு தூங்கிட்டு இருக்கானா..?’’ ’’ம்.. பாலு, மாமா ரெண்டு பேரும் டி.வி.யில ஏதோ படம் பார்த்துட்டு லேட்டாத்தான் படுத்தாங்க… பாவம், அண்ணன் யாருக்கெல்லாம் போன் போட்டு கொடுமைப் படுத்துதோ..?’’ ’’யாரு, உங்க அண்ணனா..? அவருக்கு நான் செத்தாலும் கவலை இல்லை… இந்நேரம் ரெண்டு பேரும் நிம்மதியா தூங்குவாங்க…’’ ’’அப்படி பேசாத ஷாலு, உனக்காகத்தான் ரெண்டு பேரும் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க… உன்னைவிட்டா அவங்களுக்கு யாரு இருக்கா…?’’ ’’நல்லா சொல்றீங்க, எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான் வேண்டாம். தினமும் நாலு கோயிலுக்குப் போயிட்டு வந்தா போதும்… கோபத்தைக் கிளறாதீங்க… இப்ப தூங்கியிருப்பாங்க… வேணும்னா போன் செஞ்சு பாருங்க’’ ’’இன்னும் தூங்கியிருக்க மாட்டாங்க ஷாலு, ஒண்ணு செய்யலாம், நேர போய் பார்க்கலாமா? தூங்கியிருந்தா நீ சொல்றது சரி, அப்படியே என் கூட வந்திரு… நாளைக்கு உனக்கு நானே ஒரு நல்ல ஹாஸ்டல் பார்த்து தங்க வைக்கிறேன்…’’ ’’நிஜமா…?’’ சட்டென்று எழுந்தால் ஷாலு. ‘‘சரி, வாங்க… ரெண்டு பேரும் போய் பார்ப்போம். தூங்கிக்கிட்டுதான் இருப்பாங்க. நானே ஒரு ஹாஸ்டலுக்குத்தான் போகலாம்னுதான் இருக்கேன். சொல்றதை செய்வீங்கன்னு பிராமிஸ் பண்ணுங்க.. நான் வர்றேன்…’’ எழுந்தாள். பவித்ராவுக்கு சந்தோஷமாக இருந்தது. அவளுக்கு அண்ணனைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் சத்தம் போடாமல் சுடிதார் மாட்டிக்கொண்டு வந்தாள். வீட்டைப் பூட்டினார்கள். ’’என் ஸ்கூட்டியிலே போயிடலாம், எப்படியும் திரும்பித்தானே வரப்போறோம்” என்று தன்னுடைய ஸ்கூட்டியைக் கிளப்பினாள் பவித்ரா. தாவி ஏறிக்கொண்டாள் ஷாலு. தூரத்தில் அபார்ட்மென்ட்டைப் பார்த்ததுமே பவித்ராவுக்கு நெஞ்சுக்குள் பகீரென்றது. அத்தனை வீடுகளிலும் லைட் எரிந்துகொண்டிருக்க, வாசலில் நின்றபடி அண்ணி அழுதுகொண்டிருந்தாள். அருகே போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டரிடம் அண்ணன் பேசுவது தெரிய, அருகே போய் வண்டியை நிறுத்தினாள் பவித்ரா. ’’யாருக்கும் தெரியாம கண்டுபிடிங்க சார், பொம்பளைப் பிள்ளை சார். அந்தப் பொண்ணுக்கு எதுவும் தெரியாது… சின்னக் குழந்தை சார்’’ கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்த அப்பாவைப் பார்த்ததும் ஷாலு சட்டென்று வண்டியில் இருந்து குதித்து அப்பாவைக் கட்டிப் பிடித்தாள்.
89
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்து, 93 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 89 ஆயிரத்து 701 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 856 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 326 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
100
சுவையான உணவு, சுற்றுலா, சுகமான உறக்கம், பதவி என்று ஒவ்வொருவருக்கும் இன்பம் ஒரு வகையில் கிடைக்கும். ஆனால், இந்த இன்பங்கள் எதுவுமே நிலைத்து நிற்பதில்லை. ஆம், பிரியாணியில் இன்பம் கிடைக்கிறது என்பதற்காக மூன்று வேளையும் பிரியாணியே சாப்பிடச்சொன்னால், அதுவே துன்பமாகிவிடும். அதனால் உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதுதான், உண்மையான இன்பம். உன்னுடைய தகுதிக்கு மீறி அல்லது உனக்குத் தகுதியில்லாத ஒன்றுக்கு ஆசைப்பட்டால், கையில் இருக்கும் இன்பத்தையும் இழந்துவிடுவாய்.
104
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை ஆணையம் முன் சற்று முன்னர் மருத்துவர் பாலாஜி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர் தர்மராஜன் ஆகிய இருவரும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார் கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் உள்பட மூன்று தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றபோது ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது தொடர்பாக மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது சென்னை கலசமஹாலில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இரண்டு மருத்துவர்களையும் விசாரணை செய்து வருவதாகவும், இந்த விசாரணை குறித்த தகவல்கள் இன்னும் சிலநிமிடங்களில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
106
13-11-2021, ஐப்பசி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 05.48 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 03.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. வாக்கிய குருப்பெயர்ச்சி மாலை 06.10. இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. ராகு சந்தி திருக்கணித கிரக நிலை 13.11.2021 குரு சனி சுக்கி கேது சூரிய புதன் செவ் இன்றைய ராசிப்பலன் - 13.11.2021 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். ரிஷபம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளி இடங்களில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மிதுனம் இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். கடகம் இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும். சிம்மம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். கன்னி இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். துலாம் இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தனுசு இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிட்டும். மகரம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும். கும்பம் இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மீனம் இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
117
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக்கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: தன் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நல்லது நடக்கும் நாள். மிதுனம் மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகர மான செய்தி வரும். வீட்டை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். வியாபா ரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அமோகமான நாள். கடகம் கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். கனவு நனவாகும் நாள். சிம்மம் சிம்மம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவு கள் வந்துப் போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள். கன்னி கன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக் கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். துலாம் துலாம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசு வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப் பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள். விருச்சிகம் விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்க லான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமத மாகி முடியும் நாள். தனுசு தனுசு: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அசதி, சோர்வுவந்து நீங்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். போராடி வெல்லும் நாள். மகரம் மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக் கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். இனிமையான நாள். கும்பம் கும்பம்: எதையும் சாதிக் கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங் குவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள். மீனம் மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உரு வாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர் பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
147
ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.
149
தனது நண்பரின் மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கிய கயவனை போலீசார் கைது செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகிலுள்ள திருவலங்காடு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்துவருகிறார். இந்தச் சிறுமி கடந்த சில தினங்களாகக் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக சிறுமியின் பெரியம்மா சிறுமியை அருகிலுள்ள திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், இது குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத் தன் தந்தையின் நண்பர் ராமையா (50) என்பவர், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன, சிறுமியின் பெற்றோர் இந்தச் சம்பவம் குறித்து, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள். புகாரையடுத்து, வழக்கு பதிவுசெய்த போலீஸார் ராமையாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர். விசாரணைக்குப் பின்னர் ராமையாவை, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைந்தனர். 50 வயது முதியவர் ஒருவர் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
150
கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
158
உலகமே எதிர்பார்த்த அந்த ஒரு நொடி... எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா `கேம் ஆஃப் த்ரோன்ஸ்'-ன் `கிரேட் வார்'?
160
நியூசிலாந்து - இந்தியா மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ரன்களை குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான தவான்- சுப்மன் கில் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். இதன் பின்னர் வந்த பண்ட் (15), சூர்யகுமார் யாதவ் (4) என சொதப்பியதால் மிடில் ஓவரில் தடுமாறியது. அப்போது நிதானமாக ஆடும் சூழலுக்கு தள்ளப்பட்ட சஞ்சு சாம்சன் ( 36) , ஸ்ரேயாஸ் ஐயர் (80 ) ரன்களை அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது. எனினும் ஆக்லாந்து மைதானம் மிக சிறியது என்பதால் 300 ரன்கள் என்பது கட்டாயம் வேண்டும். ஆனால் 4 ஓவர்கள் தான் மீதம் இருந்தது. அப்போது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் அனைவருக்கும் ஆச்சரியம் தந்தார். 16 பந்துகளை மட்டுமே சந்தித்த சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார். இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் 13 வருட சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது நியூசிலாந்து மண்ணில் அதிவேகமாக (16 பந்துகளில்) 30 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். அதன்பின்னர் ஒரு வீரரால் கூட அடிக்க முடியவில்லை. ஏனென்றால் நியூசிலாந்து மண்ணில் அதிரடி காட்டுவது சாதாரணம் அல்ல. பிட்ச் அந்த அளவிற்கு கடினமாக இருக்கும். இதே போல கபில் தேவ்-ன் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மண்ணில் ஏற்கனவே கூறியதை போல அதிரடி காட்ட முடியாது. அங்கு கடந்த 1992ம் ஆண்டு கபில் தேவ் 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். அதன்பின் சுரேஷ் ரெய்னா 2009-ல் 211.11 வைத்திருந்தார். தற்போது வாஷிங்டன் சுந்தர் 231.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
161
தமிழக அரசின் ஜவுளித்துறை, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொரு துறையிலும் நமது அரசு பன்னாட்டளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில்துறை முன்னணியில் இருக்கிறது. உலகத்தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த வரிசையில் துணிநூல் துறையின் சார்பில் முதன்முறையாக ஜவுளித்தொழில் குறித்தான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறையானது மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஜவுளித்துறையை பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியில் 3-ஆவது பெரிய இடத்திலும் இருக்கிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளித்தொழிலில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணி வகிக்கக்கூடிய மாநிலம். இந்தியாவினுடைய மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு மட்டுமே 12 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. ஜவுளித் தொழிலில் புதிய தொழில்நுட்ப உத்திகளை கடைப்பிடித்து, உலக அளவில் தேவைப்படும் பல்வேறு துணி வகைகளையும் தமிழகம் உற்பத்தி செய்கிறது. தொழில்நுட்ப ஜவுளி எனப்படும் 'டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்' என்பது வளர்ந்துவரும் மிக முக்கியமான ஒரு பிரிவு. இதற்கு, தமிழக அரசு முன்னுரிமை அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. விளையாட்டுத் துறையினருக்கான துணிகள், நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த துணிகள், மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் துணிகள், ஆட்டோ மொபைல் துறையில் பயன்படுத்தப்படும் காற்றுப்பைகள், சீட் பெல்ட்கள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம். தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் மெகா ஜவுளி நகரம் உருவாக்கிட முயற்சிகள் எடுத்து வருகிறோம். மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைத்திடவும் திட்டமிட்டுள்ளோம். ரூபாய் 10 கோடி செலவில், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உட்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் நிறுவிடவும் நமது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் "ஏற்றுமதி மையங்கள்" அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம். அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் நுட்ப ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
163
ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான். இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான். இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர். “”ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்,” என்றான் இந்திரன். “”நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்,” என்று ரம்பை கூறினாள். “”ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்,” என்றாள் ஊர்வசி. இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை. இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். “”இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?” என்று கேட்டார் நாரதர். “”ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை…” என்றான் இந்திரன். “”இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு…” என்றார் நாரத முனிவர். மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர். நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர். இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, “”இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்,” என்றார். உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, “”மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!” என்றான். மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. “ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?’ என்று நினைத்தான். இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், “”மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா,” என்றார். மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான். விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான். இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, “இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?’ என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான். இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை. உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான். “”விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்,” என்றான் இந்திரன். போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை. போட்டி முடிவுற்ற பிறகு, “”தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்,” என்றான் விக்கிரமாதித்தன். மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான். இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், “”வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்,” என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான். ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள். ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள். இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான். விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான். அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன. ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும். இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், “”இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக,” என்று வரமும் அளித்தான்.
178
நெல்லிக்குப்பம், செப். 9: நெல்லிக்குப்பம் நகராட்சி 24வது வார்டு கவுன்சிலர் ராணி. இவர் சர்க்கரை ஆலையால் தங்கள் பகுதி அதிகமாக பாதிக்கப்படுவதை கண்டித்தும், சர்க்கரை ஆலையை ஒட்டியுள்ள தங்களது பகுதிக்கு சாலை, குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், சர்க்கரை ஆலை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, துணைத்தலைவர் கிரிஜா, துப்புரவு அலுவலர் சக்திவேல், ஆலை அதிகாரிகள் பிரான்சிஸ், சிவமணி, கேசவன், கவுன்சிலர்கள் ராணி, பன்னீர்செல்வம், முத்தமிழன், திமுக நகர செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கவுன்சிலர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருமாறு சேர்மன் ஜெயந்தி கேட்டுக்கொண்டார். அப்போது ஆலை அதிகாரிகள், எங்களுக்கு அளித்துள்ள அனுமதி அளவுக்கு செலவானால் உடனடியாக செய்து தருகிறோம். கூடுதல் செலவாகும் தருணத்தில் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று ஒரு மாதத்தில் பணிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், பணிகளை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என கவுன்சிலர் ராணி தெரிவித்தார்.
182
நவீன பாய்க்கப்பல்களில் பொதுவாகக் காணப்படுவது [[பெர்முடா பாயமைப்பு]]க் கொண்ட சுலூப் ஆகும். பொதுவாக நவீன சுலூப்களில், பாய்மரத்துக்கு முன்புறம் பொருத்தப்படும் ஒற்றைத் [[தலைப்பாய்|தலைப்பாயுடன்]] முதன்மைப் பாய், பாய்மரத்துக்குப் பின்னால் இருக்கும் வளையில் பொருத்தப்படும். சுலூப்கள் பாய்மர உச்சியில் பொருத்தப்படும் பாய் அமைப்பையோ அல்லது பகுதி உயரத்தில் பொருத்தப்படும் பாய் அமைப்பயோ கொண்டிருக்கலாம். முதன்மைப் பாய் தலைப் பாயைவிடச் சிறிதாக இருக்கக்கூடும். இது [[செனோவா முக்கோணப்பாய்]] ஆகும். பகுதிப் பாயமைப்பில் பாயைத் தாங்கும் முன்வடம் பாய்மரத்தின் முக்காற் பங்கு அல்லது 7/8 பங்கு உயரத்தில் அல்லது வேறு பகுதி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். பகுதிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரம், பாய்மர உச்சிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரத்தைவிட முன்னோக்கி அமையக்கூடும்.
185
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் ஒருவித கவலைகள் வந்து செல்லும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். . மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுகம் ஆவர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். கடகம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள். சிம்மம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மைகள் நடக்கும் நாள். துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். முயற்சியால் முன்னேறும் நாள். . . விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள். . தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். மகரம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை அயலாரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள். கும்பம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சிறப்பான நாள். மீனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
0
Edit dataset card